fbpx

மிக கனமழை எச்சரிக்கை..!! நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!!

அதி கனமழை காரணமாக நாளை (நவம்பர் 4) கன்னியாகுமரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

இதனால், தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காற்று மாசு..!! சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அபாயம்..!! சென்னை மக்களே உஷார்..!!

Fri Nov 3 , 2023
சமீப காலமாக சென்னை மற்றும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விட சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. இந்த காற்று மாசு ஏற்படுவதால் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளானர். காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு “டைப் 2” நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். மேலும், சர்வதேச பத்திரிகைகளில் […]

You May Like