fbpx

மனைவியுடன் தனிமையில் இருந்தபோது வீடியோ..!! 50 சவரன் நகை கேட்டு மிரட்டிய கணவர் குடும்பம்..!!

உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் டாக்டரை மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் கோனேரிப்பாளையத்தை சேர்ந்தவர் விமல் (31). இவருக்கும் 25 வயதான ஹோமியோபதி பெண் டாக்டருக்கும் கடந்த 2021 செப்டம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விமல் துன்புறுத்தி வந்துள்ளார். அத்துடன் மனைவியிடம் உடலுறவின்போது எடுத்த வீடியோவை பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வரதட்சணையாக 50 சவரன் நகை மற்றும் பணம் வேண்டும் என்று விமல் கேட்டுள்ளார். இதற்கு விமலின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும், உல்லாச காட்சியை காண்பித்து மனைவியை மிரட்டியதாக தெரிகிறது.

மனைவியுடன் தனிமையில் இருந்தபோது வீடியோ..!! 50 சவரன் நகை கேட்டு மிரட்டிய கணவர் குடும்பம்..!!

இந்நிலையில், விமலின் செல்போனை அவரது மனைவி எடுத்து பார்த்தபோது அதில், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கணவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விமல் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரி, அவரது கணவர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் நடிகை கௌதமியின் மகள்….!

Mon Jan 23 , 2023
80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை கௌதமி. இவர் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். நடிகை கௌதமி கடந்த 1998ஆம் வருடம் சந்திப் பாட்டியா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சுபலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். […]

You May Like