fbpx

திடீரென உயிரிழந்த விஜய் டிவி பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் உயிரிழந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் காத்து கருப்பு, கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், ஈரமான ரோஜாவே 2 போன்ற சிறந்த சீரியல்களை இயக்கியவர் தான் இயக்குனர் தாய் செல்வம். இவர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இத்தகைய நிலையில் தாய் செல்வம் தற்போது திடீரென உயிரிழந்துள்ளார். இது குறித்து விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைய்டுத்து விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தாய் செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Rupa

Next Post

#திண்டுக்கல்: கணவனை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி..!

Thu Dec 15 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சந்தப்பேட்டையில் நவீன் குமார் (32) என்ற இளைஞர் சென்ற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வேடச்சந்தூர் அடுத்த கோடாங்கிப்பட்டியின் அருகில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.  இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், நவீன்குமாரின் மனைவியான விஜயசாந்தி (25), என்பவர் தனது ஆண் நண்பர் சிவா(26) என்பவரோடு சேர்ந்து நவீன்குமாரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.  இதனை தொடர்ந்து […]

You May Like