fbpx

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!! எல்.கே.சுதீஷ் அறிவிப்பு..!!

தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அவருடைய மைத்துநர் எல்.கே.சுதீஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்தின் மைத்துநர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் காலமானார். அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார். இதையடுத்து, அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

சாலிகிராமத்தில் சில நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடல், தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’அண்ணே என்ன மன்னிச்சிருங்க’..!! வீடியோவில் கதறி கதறி அழுத நடிகர் விஷால்..!!

Thu Dec 28 , 2023
விஜயகாந்த் மறைவை அடுத்து நடிகர் விஷால் கண்ணீர் விட்டு கதறி அழுது இரங்கல் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என அனைவரும் வரிசையாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷால், வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அண்ணே.. […]

You May Like