fbpx

விநாயகர் ஊர்வலத்தில் சோகம்.. மின்சாரம் தாக்கியதில் 2 பேர் மரணம்…

விருநுநகரில் விநாயகர் சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புதூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.. ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக விநாயகர் சப்பரம் கொண்டு செல்லப்பட்டது.. இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள குலாலர் தெருவில் சப்பரத்தை திருப்பிய போது மரத்தின் மீது மோதி நின்றது.. இதை தொடர்ந்து சப்பரத்தை இடது புறம் திருப்பிய போது, அங்கிருந்த விளம்பர பலகை சம்பரத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.. இந்த விபத்தில் 2 உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்..

உடனடியாக அவர்கள் சிவகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.. இந்த 5 பேரில் சொக்கநாதன் புதூரை சேர்ந்த மாரிமுத்து, முனீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

Maha

Next Post

அடடே சூப்பர்..! செமஸ்டர் தேர்வில் இது கட்டாயமாம்..! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Thu Sep 1 , 2022
அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால், சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, அனைத்து […]
அடடே சூப்பர்..! செமஸ்டர் தேர்வில் இது கட்டாயமாம்..! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

You May Like