விருநுநகரில் விநாயகர் சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புதூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.. ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக விநாயகர் சப்பரம் கொண்டு செல்லப்பட்டது.. இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள குலாலர் தெருவில் சப்பரத்தை திருப்பிய போது மரத்தின் மீது மோதி நின்றது.. இதை தொடர்ந்து சப்பரத்தை இடது புறம் திருப்பிய போது, அங்கிருந்த விளம்பர பலகை சம்பரத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.. இந்த விபத்தில் 2 உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்..
உடனடியாக அவர்கள் சிவகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.. இந்த 5 பேரில் சொக்கநாதன் புதூரை சேர்ந்த மாரிமுத்து, முனீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..