fbpx

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவா..? பரபரப்பு தகவல்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில், பெண்களுக்கான உரிமைத் தொகை 1,000 ரூபாய் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இன்புதுரை தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, “தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளோம். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையருக்கும் புகார் மனுவை அனுப்பி உள்ளோம்.

அதிமுக சார்பாக இதுவரை 12-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப் போகிறோம் என்று சொல்லி இருந்தேன் என குறிப்பிட்டால், அது மக்களை ஏமாற்றும் மோசடி. தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இந்த பேச்சு எல்லா தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பானது. ஆகவே, முதல்வர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

Chella

Next Post

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி திரையரங்கில் விபத்து..!! திடீரென கீழே விழுந்த மேற்கூரை..!! அலறியடித்து ஓட்டம்..!!

Sat Feb 25 , 2023
சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடியிருந்த நிலையில், சுமார் 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் […]
எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி திரையரங்கில் விபத்து..!! திடீரென கீழே விழுந்த மேற்கூரை..!! அலறியடித்து ஓட்டம்..!!

You May Like