fbpx

Dance: விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோலி!… வைரலாகும் வீடியோ!

Dance: சென்னைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இடைவெளியின்போது இசைக்கப்பட்ட விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு விராட் கோலி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி 21 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அனுஜ் ராவத் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் முஸ்தாபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களக கேப்டன் கெய்குவாட், ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர். கெய்குவாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ச் 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். பெங்களூரு தரப்பில் அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக, ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஓவர்களுக்கு இடையேயும் 2.30 நிமிட இடைவெளி விடப்படும். அப்போது பார்வையாளர்களுக்காக சினிமா பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கும். அந்தவகையில், நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் விஜய்யின் அப்படி போடு பாடல் இசைக்கப்பட்டது. அப்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கிங் கோலி, திடீரென நடனமாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Readmore: Chennai: கடும் தண்ணீர் பஞ்சம்!… பெரும் ஆபத்தில் சென்னை!… 6 நகரங்களுக்கு எச்சரிக்கை!

Kokila

Next Post

பாமக வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா அறிவிப்பு..!! எங்கு போட்டியிடுகிறார்..?

Sat Mar 23 , 2024
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். பிரச்சாரமும் களைகட்டி வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. […]

You May Like