fbpx

இடுப்பளவு தண்ணீர்..!! சிக்கித் தவித்த கர்ப்பிணியை ஜேசிபி மூலம் மீட்ட அமைச்சர் எ.வ.வேலு..!!

முத்தம்மாள் காலனியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணை அமைச்சர் எ.வ.வேலு மீட்டுள்ளார்.

தென்மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையால் தூத்துக்குடி நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் முதல் பகுதியான இருக்கும் முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் மார்பளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று காலை முதலே தூத்துக்குடி பகுதியில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் முகாமிட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் படகுகளும், லாரியும் செல்ல முடியாத நிலையில், அமைச்சர் எ.வ.வேலு 2 ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவுகளை வழங்கினார். அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அதில் 8ஆம் தெருவில் நுழையும் போது மார்பளவு தண்ணீரில் தவித்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜேசிபி இயந்திரம் மூலம் அமைச்சர் எ.வ.வேலு பத்திரமாக மீட்டார்.

Chella

Next Post

பெருவெள்ளத்தை தொடர்ந்து அடுத்து கிளம்பிய புதிய பிரச்சனை..!! மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

Tue Dec 19 , 2023
தென் மாவட்டங்களில் மழை குறைந்து வெள்ளம் வடியத் துவங்கியுள்ள நிலையில், அடுத்து குடிநீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதேபோல் தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் சின்னசுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை […]

You May Like