fbpx

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்கள் தேர்வு…! ஊக்கத்தொகை வழங்கப்படும்…!

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்க்காணலில் கலந்து கொள்ளலாம்.

குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-லிருந்து 50 வரை இருக்க வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை. இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Vignesh

Next Post

ஒரு தலைவர் செய்கின்ற வேலையா இது…..? மாணவிகளுடன் ஆபாசமாக இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் மாணவரணி தலைவரின் மறுபக்கம் இவ்வளவு கேவலமானதா…..?

Tue Jun 20 , 2023
கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிசு என்ற அமைப்பின் தலைவர் பல பெண்களுடன் தகாத முறையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட பிரதிக் கவுடா கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கௌடா பல இளம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகளை செய்து அவற்றை பதிவு செய்து வந்ததாக […]

You May Like