fbpx

அதிக பென்ஷன் வேண்டுமா..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்கலாம்.

இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதிலும் இருந்து அதிக ஓய்வூதியம் கோரி 16 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள், ஊழியர்கள் என சுமார் 1,000 பேருக்கு இபிஎஃப்ஓ சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய பென்ஷன்தாரர்கள் அல்லது ஊழியர்கள் கேஒய்சி தகவல்களை சேர்ப்பதில் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் இபிஎஃப்ஐஜிஎம்எஸ் (EPFiGMS) இணையதளம் மூலம் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வாடிக்கையாளர்களே..!! இனி கவலை வேண்டாம்..!! வீட்டிலிருந்தே இந்த வேலையை முடித்துவிடலாம்..!! எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

Thu Jun 29 , 2023
எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, மூத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்து வாட்ஸ் அப் செயலி மூலமாக தங்களுடைய பென்ஷன் ஸ்லீப்களை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி இருப்பு கணக்கு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட்டை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று […]

You May Like