fbpx

திரும்பவும் முதல்ல இருந்தா?… அமெரிக்கா, இஸ்ரேலில் பிஏ.2.86 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!… உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், பிஏ.2.86 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல கோடி கணக்கில் உயிர் பலியை எடுத்தது. இதன் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரசாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை தாக்கி வருகிறது.கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில், ‘கொரோனாவை ஏற்படுத்தும் வைரசின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டு உள்ளது’ என கூறியுள்ளது.இந்த வைரஸ் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ள சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகரில் தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பேசிய இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இது தொடர்பாக கூறியதாவது:-சுகாதாரம் ஆபத்தில் இருக்கும்போது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கியமான பாடத்தை கொரோனா நமக்கு கற்றுத்தந்தது. வலி நிறைந்த இந்த பாடத்தை கொரோனா தொற்று காலத்தில் உலகம் அறிந்து கொண்டது.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை என்றாலும், உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடிக்கிறது.ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தி இருக்கிறது. பிஏ.2.86 என்ற அந்த மாறுபாடு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

Kokila

Next Post

தலை நசுக்கப்பட்ட நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த ஓட்டுநர்….! புதுச்சேரி அருகே பயங்கரம், குற்றவாளிகளுக்கு காவல்துறை வலை வீச்சு….!

Sun Aug 20 , 2023
புதுச்சேரி அருகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஓட்டுனரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர், அவரின் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முகசுந்தரம்(48) இவர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக கண்டமங்கலம் அருகே இருக்கின்ற புதுச்சேரி பகுதியான, அரியூர் பகுதியில், தன்னுடைய […]

You May Like