சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதான ரிஷிதரன் மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி முன்னால் சென்றுகொண்டிருந்த ரிஷிதரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, நிலை தடுமாறி கீழே விழுந்த ரிஷிதரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்தனர். மேலும் கவன குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த ரிஷிதரன் சபரிமலை செல்வதற்காக ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்துள்ள நிலையில் சபரி மலைக்கு செல்வதற்கு முன்னதாகவே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் சோகத்தையும் அதிசயம் ஏற்படுத்தியது.