fbpx

நாம் தமிழர் கட்சியுடன் தவெக கூட்டணி..? விஜய் என்ன சொன்னார்..? புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்..!!

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவு செய்வார் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், மொத்தமாக 8.19% சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே, சீமான் தமிழக வெற்றிக் கழகத்துடன் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியிருந்தார்.

தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அடுத்தக் கட்ட கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூன் 18ஆம் தேதி சென்னை பனையூரில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே விஜய் தொடர்ந்து கூறும் அறிவுரை. சீமானுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவு செய்வார். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா? என்பதை விஜய் அறிவிப்பார். ஜூன் 18ஆம் தேதி தவெக சார்பாக எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. அதுதொடர்பான அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், எந்த அவசரமும் வேண்டாம். அடுத்ததாக நாமக்கல்லில் கட்சி அலுவலகம் திறக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Bussy Anand has said that Vijay will decide about forming an alliance with Nam Tamil Party.

Chella

Next Post

நீங்கள் அதிக நேரம் காரில் பயணிப்பவரா..? புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

Sun Jun 9 , 2024
In this post we'll see how dangerous car air is and what real reports say.

You May Like