fbpx

”ஏழை மக்களை பாதிக்கும் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது”..! அன்புமணி ராமதாஸ்

ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை உயர்த்தப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

”ஏழை மக்களை பாதிக்கும் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது”..! அன்புமணி ராமதாஸ்

தயிருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 5 சதவீதம் மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20 சதவீதம் விலையை உயர்த்துவதும், நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில், அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்? குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக் கூடாது. விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது..! வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!

Thu Jul 21 , 2022
கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியின் விடுதி, அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி சந்தேக மரண வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் சரஸ்வதி, ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அல்லது பள்ளி […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்..! ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்..!

You May Like