fbpx

திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!! தாம்பூல பையில் மதுபானம்..!! அதிரடி நடவடிக்கை எடுத்த புதுச்சேரி கலால்துறை..!!

புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய், பழங்களுடன் மது பாட்டிலும் அதனுடன் பிஸ்கட் பாக்கெட் வைத்து கொடுத்துள்ளனர். இது திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த நிகழ்விற்கு வந்த உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில், புதுச்சேரி கலால் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Chella

Next Post

லஞ்சம் வாங்குவதில் காட்டும் அக்கறையை, சம்பளம் வாங்குவதிலும் காட்டுங்க... அதிகாரிகளுக்கு அட்வைஸ்....

Fri Jun 2 , 2023
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் சிலோன் காலணியில் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்துக்காக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி தாசில்தார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபாண்டி மதுரைக்கிளையில் நீதிமன்ற […]

You May Like