fbpx

களைகட்டும் கார்த்திகை தீபத்திருவிழா!… திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!… முன்பதிவும் செய்யலாம்!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருநாள் வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதையொட்டியும், 27ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 வழித்தடங்களில் இயக்கப்பட்ட உள்ளன.

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Kokila

Next Post

கோவை மக்களுக்கு எச்சரிக்கை..!! நிலைமை சரியில்ல..!! மாஸ்க் கட்டாயம்..!! வெளியான அறிவிப்பு..!!

Wed Nov 22 , 2023
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 50-ஆக இருந்த நிலையில், தற்போது 100 வரை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு மக்கள் சென்று வந்ததே ஃப்ளூ வைரஸ் பரவ காரணமாகும். குழந்தைகள், முதியவர்கள் மத்தியில் இந்த வைரஸ் விரைவாக பரவி வருகிறது. சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் […]

You May Like