fbpx

’என்னது 13 நாட்களா’..? வங்கி ஊழியர்களின் முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

வங்கி ஊழியர்கள் 13 நாட்களுக்கு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கி ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும், ஜனவரி 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19, 20ஆம் தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தப் போராட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் 13 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் ஏடிஎம் சேவைகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

மசூதி அருகே பயங்கர குண்டுவெடிப்பு..!! போலீஸ் டிஎஸ்பி உள்பட 52 பேர் பரிதாப பலி..!!

Fri Sep 29 , 2023
பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள முக்கிய பகுதி பலூசிஸ்தான். இங்கு மஸ்டங் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பிரபல மசூதி ஒன்று அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் இஸ்லாமியர்கள் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், இன்றும் அந்த மசூதிக்கு ஏராளமானோர் தொழுகைக்கு சென்றனர். இதனால், […]

You May Like