fbpx

லாலு பிரசாத் யாதவுக்கு என்ன ஆச்சு..? உடல்நிலை கவலைக்கிடம்..? மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 76), கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவதியடைந்து வருகிறார். இதற்கிடையே, அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றார். ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிங்கப்பூரில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். லாலு பிரசாத், அரசியலில் ஆக்டிவாக இல்லாத நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தை அவரது மகன் தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் தான், லாலு பிரசாத் டெல்லிக்குச் செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது உடல்நிலை திடீரென மோசமானதால், நேற்று பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிறுநீரக பிரச்சனை மட்டுமின்றி, இருதய பிரச்சனையும், வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. தற்போது மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Read More : வக்பு மசோதா விவகாரம்..!! எம்பி பதவியை ராஜினாமா செய்யவும் தயார்..!! மத்திய அமைச்சருக்கு சவால் விட்ட ஆ.ராசா..!!

English Summary

RJD chief Lalu Prasad Yadav has been admitted to Delhi’s AIIMS hospital due to health problems.

Chella

Next Post

பத்திரப்பதிவு செய்யப்போறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை தலைவர்..!!

Thu Apr 3 , 2025
The Registry Department has ordered that bonds issued by court order be registered on a temporary number basis.

You May Like