தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்துள்ளார். நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளார்.