fbpx

ரேஷன் கடை தேர்வு முடிவுகள் என்ன ஆச்சு..? எப்போது வெளியாகும்..!! கசிந்த முக்கிய தகவல்..!!

கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், வெறும் நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்பதால், லட்சக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான, நேர்காணல் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அன்று மாலையே நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும், கிட்டத்தட்ட 15 -20 நேர்காணல் அறைகள் அமைக்கப்பட்டு, முன்னாள்/இன்னாள் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தேர்வை நடத்தினர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை அந்தந்த மாவட்ட வட்டாட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

கிராம உதவியாளர் பதவியைப் பொறுத்தவரையில், அறிவிப்பு நிலை முதல் இறுதி நியமனம் வரை, அந்தந்த மாவட்ட வட்டாட்சியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டனர். வரப்பெற்ற விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணங்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியிடப்பட்டன. ஆனால், நியாய விலைக் கடைகளில் இத்தகைய வெளிப்படைத் தன்மை இல்லை என்று தேர்வர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் இதுநாள் வரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இத்தகைய, பட்டியல் வெளியிடப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மின்துறை நிலக்கரி விநியோகம் செய்ய இந்திய ரயில்வே முன்னுரிமை...! மத்திய அரசு அறிவிப்பு...!

Fri Mar 10 , 2023
மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது. மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 அடுக்குகள் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2023 அன்று, நாளொன்றுக்கு 426.3 அடுக்குகள் அனுப்பப்பட்ட நிலையில் […]

You May Like