fbpx

உபி: கொடூரத்தின் உச்சம்…. காணாமல் போன 2 வயது குழந்தை! அழுகிய நிலையில் லாப்டாப் பேக்கில் சடலமாக மீட்பு!

உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இரண்டு வயது சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் லேப்டாப் பேக்கிலிருந்து எடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சார்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி மஞ்சு இந்த தம்பதியினருக்கு மான்சி என்ற இரண்டு வயது பெண் குழந்தை இறந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகுமார் மற்றும் மஞ்சு ஆகியோர் வெளியே சென்று வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தங்களது மகள் வீட்டில் இல்லை.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிரமாக விசாரணையில் இறங்கினர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்ததில் அருகில் இருந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து சோதனைக்காக அந்த வீட்டிற்கு சென்றனர் காவல்துறையினர். ஆனாலும் அந்த வீடு பூட்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது லேப்டாப் பேக் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பையை சோதனை செய்ததில் காணாமல் போன குழந்தை மான்சி அழுகிய நிலையில் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடலை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் அந்த வீட்டிலிருந்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

கர்நாடகா: பரபரப்பு.... முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் பற்றிய தீ! நடந்தது என்ன?

Thu Apr 13 , 2023
கர்நாடக முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருப்பவர் பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு தனது மனைவியுடன் சாமி கும்பிடுவதற்காக சென்று இருக்கிறார். அப்போது தான் இவரது ஹெலிகாப்டரில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது இந்த விபத்தில் எந்தவிதமான சேதமோ, எதுவுமில்லை என அரசு தரப்பு அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளும் […]

You May Like