fbpx

”என்னது இதெல்லாம் வதந்தியா”..? ”இந்தியாவின் பெயரை மாற்றவில்லையா”..? கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்..!!

இந்தியா என்ற பெயரை மாற்றுவது தொடர்பான விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில், “இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. இந்த செய்திகள் ’பாரத்’ என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. அரசின் அழைப்பிதழ்களில் பாரதம் என குறிப்பிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

நான் பாரத அரசின் அமைச்சர். பாரதம் என்ற பெயரையே விரும்பாத இவர்கள் யார்? இவர்கள் ஏன் பாரதத்தை எதிர்க்க வேண்டும்? இப்போதெல்லாம் பாரதம் என்று குறிப்பிட்டால் கூட வலியை உணர ஆரம்பித்து விட்டீர்களா? தேசத்தின் முன் கட்சியை வைத்து அரசியல் என்ற புதைமணலில் சிக்கியவர்கள் இவர்கள்தான் பாரதத்தை எதிர்க்கிறார்கள்.

10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், எதிர்க்கட்சிகள்தான் தங்கள் கூட்டணியை UPA என்று அழைப்பதை நிறுத்திவிட்டன. பெயரை மாற்றுவதால் உங்கள் செயல்கள் மாறாது. இந்த ஊழல் கூட்டணி, ஆணவம் நிறைந்த கூட்டணியை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.

Chella

Next Post

உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனை எல்லாம் இருக்கா….? அப்படி என்றால், இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்….!

Wed Sep 6 , 2023
நம்முடைய உடல் நலனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். ஆகவே, நம்முடைய உடல் எந்த விதமான உணவை சாப்பிட்டால், பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்பதை அறிந்து, அதன்படி, நாம் உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அந்த வகையில், உடல் நலனில் வயிறு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. பல நபர்களுக்கும், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் உள்ளிட்டவற்றால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில பழங்களை தொடர்ந்து, சாப்பிட்டு வருவதன் […]

You May Like