fbpx

Dehydration: வெயில் நேரத்தில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து! எளிதாக விட்டால் மரணம் நிகழும்…! அறிகுறிகள் என்ன..!

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அதீத வெயில்காரணமாக உடல்நலப் பிரச்னைகளும் வரத் தொடங்கிவிடும். அவற்றில் முக்கியமான ஒன்று, டி-ஹைட்ரேஷன்(நீரிழப்பு). அது ஏன் ஏற்படுகிறது, அதன் விளைவுகள் என்ன?

டி-ஹைட்ரேஷன் என்றால் என்ன? உடலில் உள்ள நீர் அதிகளவில் குறைவதால் டி-ஹைட்ரேஷன் ஏற்படுகிறது. சில சமயங்களில் இவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைகிறது. பெரும்பாலும் கோடைக்காலங்களில்தான் ஏற்படுகிறது.

தண்ணீர் குடிக்காமல் இருத்தல், டையரியா, வாந்தி, அதிகளவிலான வியர்வை, அதிக சிறுநீர் கழித்தல், காய்ச்சல் போன்ற காரணங்களால் டி-ஹைட்ரேஷன் ஏற்படுகிறது. இந்த டி-ஹைட்ரேஷனால் அதிகளவில் முதியவர்கள், குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், கிட்னி பிரச்னை உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெயில் நேரத்தில் அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் டி-ஹைட்ரேஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

டி-ஹைட்ரேஷனின் அறிகுறிகள் என்னென்ன? வாய்கள் வறண்டு காணப்படும், தாகம் அதிகமாக எடுக்கும், சிறுநீர் அடர்மஞ்சள் நிறத்தில் போகும், உடல் சோர்வு, மயக்கநிலை ஆகியவை டி-ஹைட்ரேஷனின் அறிகுறிகள். சிறியவர்களுக்கான அறிகுறிகள் எது என்றால், அழுதால் கண்களில் தண்ணீர் வராதது, அதீத காய்ச்சல், அதிகளவிலான தூக்கம், கண்களில் குழி விழுந்தார்போன்று காணப்படுவது. டி-ஹைட்ரேஷனை 3 நிலைகளாக பிரிக்கலாம்.

முதல்நிலை நம் உடலில் 5ல் இருந்து 6 சதவீதம் தண்ணீர் இழந்தால் தலைவலி மயக்கம், உடல்சோர்வு காணப்படும். இரண்டாம் நிலை 7ல் இருந்து 10 சதவீதம் தண்ணீரை இழந்தால் Low BP வரும். சிறுநீர் கழிக்க முடியாது. 10 சதவீதத்துக்கு மேல் உடலில் இருந்து தண்ணீரை இழந்தால் மரணம் கூட ஏற்படலாம். அதிகளவில் தண்ணீர் குடித்தாலே டி-ஹைட்ரேஷன் வராமல் நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Read more: Mount Tai | 6,600 படிக்கட்டுகள்.!! ஊர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.!! 80 லட்சம் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ.!!

Baskar

Next Post

BREAKING: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

Tue Apr 23 , 2024
சென்னை என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் முதல் இடம் சென்ட்ரல் ரயில் நிலையம்தான். இப்படி தலைநகர் சென்னையின் அடையாள சின்னமாக விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாளொன்றுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். சென்னையை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் இந்த ரயில் நிலையத்தை கடக்காமல் பணிக்கு செல்ல முடியாது. அப்படி ஹாட்ஸ்பாட் இடமாக இருக்கும் இந்த இடத்தில் இன்று காலை மிகவும் பயங்கரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் […]

You May Like