fbpx

தமிழக வரலாற்றில் அதிகபட்சம் பெய்த மழையின் அளவு எவ்வளவு..? எங்கு தெரியுமா..? வெதர்மேன் தகவல்..!!

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச கனமழை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 679 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 618 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. ஒட்டு மொத்த தமிழக வரலாற்றில் நீலகிரி மாவட்டம் கக்காச்சி என்ற பகுதியில் 1992-ஆம் ஆண்டில் 24 மணிநேரத்தில் 965 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் பெய்த அதிகபட்ச கனமழை இது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

நாளையும் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Mon Dec 18 , 2023
150 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள […]

You May Like