மருத்துவமனை விடுதியில் 3 டாக்டர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் தனியார் கல்வி நிறுவத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பஸ்டி சதார் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருடன் சமூக வலைத்தலம் மூலம் நட்பானார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்ததால் அவரை பார்க்க நேரில் சென்றுள்ளார்.
அங்கிருந்த விடுதி அறைக்குள் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த மேலும் 2 மருத்துவர்கள் சேர்ந்து கொண்டு 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்தஅந்தபெண் லக்னோ காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெறிமுறையை கடைபிடிக்க வேண்டிய மருத்துவர்களின் இந்த செயல் மருத்துவமனையில் பெண் பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.