fbpx

மருத்துவமனை விடுதியில் டாக்டர்கள் செய்த காரியம்… பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரால் அதிர்ச்சி…

மருத்துவமனை விடுதியில் 3 டாக்டர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் தனியார் கல்வி நிறுவத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பஸ்டி சதார் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருடன் சமூக வலைத்தலம் மூலம் நட்பானார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்ததால் அவரை பார்க்க நேரில் சென்றுள்ளார்.

அங்கிருந்த விடுதி அறைக்குள் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த மேலும் 2 மருத்துவர்கள் சேர்ந்து கொண்டு 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்தஅந்தபெண் லக்னோ காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெறிமுறையை கடைபிடிக்க வேண்டிய மருத்துவர்களின் இந்த செயல் மருத்துவமனையில் பெண் பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Next Post

BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Wed Oct 5 , 2022
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Deputy Engineer/ E-II Grade பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு […]

You May Like