fbpx

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது..? தேதியை அறிவித்தது தேர்வு வாரியம்..!

ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் 10ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. முதற்கட்ட தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாள்-1க்கான தேர்வு, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இணைவது எப்போது தெரியுமா..? புகழேந்தி பரபரப்பு பதில்..!

Wed Aug 10 , 2022
சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் தொண்டர்களே புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பர் என விதி உள்ளது. அப்படி இருக்கையில் அவசர அவசரமாக பழனிசாமி ஊர் ஊராக சென்று […]

You May Like