fbpx

”பிரட் பாக்கெட்டை எப்போ சார் ஓபன் பண்ணுவீங்க”..? எலியால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்..!!

ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் நிமிடங்களில் டெலிவரி செய்வதாகச் சொல்லி காலாவதியான பொருட்களை அனுப்பவது, தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதுபற்றி அதிகபடியான புகார்கள் எழுந்த போதும் தொடர்ந்து குளறுபடிகள் நடந்தே வருகின்றன. அப்படி, நிதின் அரோரா என்பவர் Blinkit தளத்தில் தான் ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டிற்குள் உயிருடன் எலி நெளிந்துக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ப்ளின்கிட் சேவையில் மிகவும் விரும்பத்தகாத அனுபவம் கிடைத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டில் உயிரோடு இருக்கும் எலி இருந்திருக்கிறது. இது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியென்றே நினைக்க வேண்டியுள்ளது. 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதில் இத்தனை குளறுபடிகளும், பொறுப்பின்மையும் இருந்தால், நான் மணிக்கணக்கில் வரிசையில் நின்றே வாங்கிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளதோடு, பிளின்கிட் கஸ்டமர் கேரில் புகார் தெரிவித்ததையும் பகிர்ந்திருக்கிறார் நிதின் அரோரா. இவரின் பதிவை கண்ட பிளின்கிட் நிறுவனம், “இது போன்ற மோசமான அனுபவத்தை நீங்கள் பெற வேண்டுமென நாங்கள் நினைத்ததில்லை. உங்களுடைய விவரங்களை தெரிவியுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது. நிதினின் இந்த பதிவு வைரலாகவே பல இணையவாசிகளும் பிளின்கிட்டின் தரமற்ற சேவையால் தங்களது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

Chella

Next Post

அம்மாடியோ... மதரசா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை - கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Sun Feb 12 , 2023
கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த  மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள  அலுவாவை  சார்ந்தவர் யூசுப்  வயது 72. இவர்  கோட்டையம் மாவட்டத்தில்  ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு  அங்கு பாடம் படிக்க வந்த மாணவிகளிடம்  இவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனைத் […]

You May Like