fbpx

மணிமேகலைக்கு புதிய வீடு கட்ட எங்கிருந்து பணம் வந்தது..? இதெல்லாம் சமூகத்துக்கு நல்ல உதாரணமா..? கொந்தளித்த ஷகிலா

நடிகை ஷகிலா பிரியங்கா – மணிமேகலை விஷயத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். ஷகிலா ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான். தற்போதைய 5-வது சீசனிலும் இரண்டு எபிசோடில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பிரியங்காவை பற்றி சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்கள் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி வருகின்றனர். இதுவெல்லாம் ரொம்ப தவறு. அப்படியே மணிமேகலைக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு பிரியங்காவை மனதளவில் உடைய வைக்கும் வகையில் அதிகமான கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். மணிமேகலைக்கு பிரியங்கா மீது பொறாமை. நம்மை விட அதிகம் சம்பாதிக்கிறார். நம்மை விட நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் என்று நினைக்கிறார்.

பிரியங்கா மட்டும் அயர்லாந்துக்கு போவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்கும் ரசிகர்கள், மணிமேகலை புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறாரே அந்த வீடு கட்ட எப்படி பணம் வந்தது என்று கேட்கலாமே. பிரியங்கா டைவர்ஸ் ஆகிவிட்டது என்று சிலர் அவருடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார்கள். மணிமேகலை மட்டும் அப்போ சரியா? மணிமேகலை அவருடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து தானே கல்யாணம் பண்ணி இருக்கிறார்.

இது சமூகத்துக்கு நல்ல உதாரணமா? இவங்களை உதாரணமாக காட்ட முடியுமா? நம் வீட்டு பெண்களை இதுபோல நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று யாராவது உதாரணமாக காட்ட முடியுமா? பிரியங்கா தப்பு என்று சொன்னால் மணிமேகலையும் தப்புதான் என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருக்கும் நிலையில் இது அதிகமான கருத்துக்களை, விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

Read More : வாகன ஓட்டிகளே..!! அமலுக்கு வந்த 3 முக்கிய விதிமுறைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Some talk about Priyanka’s life that she has become divers. Is it right then only the hourglass?

Chella

Next Post

பள்ளி மாணவியை தரதரவென இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!! அடித்து துவைத்த பொதுமக்கள்..!!

Thu Sep 19 , 2024
The youth who raped a 14-year-old schoolgirl near Vandalur was slapped by the public and handed over to the police.

You May Like