fbpx

கைலாசா எங்கு இருக்கிறது..? நீங்களும் வரலாம்..? உடனே புக் பண்ணுங்க..!! இடத்தை அறிவிக்கும் நித்தியானந்தா..!!

இந்தியாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நிலையில், அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற தகவல் இதுவரை வெளிவராத நிலையில், அது தொடர்பாக பல பரபரப்பு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நித்தியானந்தா, கைலாச நாட்டுக்காக தனி பாஸ்போர்ட் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை அறிவித்த நிலையில், அவர் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறி, அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அதோடு கைலாச நாட்டுக்கு ஐநா சபை அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐநா சபையில் கைலாசா பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசிய சம்பவங்களும் அரங்கேறின.

இந்நிலையில், கைலாசா இருக்கும் இடத்தை வருகின்ற ஜூலை 21ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக நித்தியானந்தா தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், உங்களை வரவேற்க கைலாசா தயாராக இருக்கிறது என்றும், நீங்கள் கைலாசா பிரதிநிதியாக உடனடியாக புக் செய்யுங்கள் என்றும் ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்.

Read More : மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உங்களுக்கு பணம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

English Summary

Nithyananda announced on his official X page that he will announce the location of Kailasa on July 21.

Chella

Next Post

சிறுமியுடன் அடிக்கடி உல்லாசம்..!! வீடியோ எடுத்த காதலன்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை..!!

Thu Jul 4 , 2024
The murder of a 14-year-old girl who took a video while having fun has caused a shock.

You May Like