fbpx

Election: தமிழகத்தில் அதிகபட்சமாக எந்த தொகுதியில் வாக்குகள் பதிவு….?

தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினர்.

தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகராஷ்டிரா (5), பிஹார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

44 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.40% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75.35 % வாக்குப்பதிவாகி உள்ளது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 67.53% வாக்குகள் பதிவாகி உள்ளன. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 68.26% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Vignesh

Next Post

குலதெய்வத்திற்கு பிடித்தவற்றை படையல் போட்டால், கெட்ட சக்திகள் ஓடிபோகும்..!

Sat Apr 20 , 2024
எதிரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க குலதெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும். அனைத்தும் பறந்து போகும். இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படுபவர்கள்தான் அதிகம். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை […]

You May Like