fbpx

#Leave : தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டத்தில் விடுமுறை..?

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடனேயே இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே மழையின் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Kathir

Next Post

காதல் மோகத்தால் 2 முறை கர்ப்பம்..!! அக்கா திட்டியதால் உறவை துண்டித்த இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Mon Dec 12 , 2022
கர்ப்பம் ஆக்கிவிட்டு காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் லேபர் காலனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் ஹரிணி (20), தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது, வீட்டின் அருகே ராகுல் காந்தி என்ற இளைஞர், தனது அக்கா வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இருவருக்கும் கடந்த […]

You May Like