டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆபாச படம் பார்த்துக்கொண்டே பெண்களுக்கு மத்தியில் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பாக காணப்படும் டெல்லி மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்றும் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மெட்ரோ ரயிலில் பெண்ணின் அருகே அமர்ந்திருந்த வாலிபர் திடீரென செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பெண் பயணிகள் முகம் சுளித்தபடி அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து விலகி ஓடினர்.
இதனை அந்த ரயிலில் இருந்த சக பயணிகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்ததில் ஈடுபட்ட நபர் மீது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.