fbpx

’யாரு சாமி நீங்க’..!! ஒரே ஒரு மாணவர்..!! ஒரே ஒரு ஆசிரியர்..!! அசத்தும் அரசுப் பள்ளி..!!

பள்ளி ஒன்றில் ஒரே ஒரு மாணவனுக்கு, ஒரே ஒரு ஆசிரியர் இரண்டு ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் 150 பேர் வசித்து வரும் நிலையில், அக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3ஆம் வகுப்பு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும்.

’யாரு சாமி நீங்க’..!! ஒரே ஒரு மாணவர்..!! ஒரே ஒரு ஆசிரியர்..!! அசத்தும் அரசுப் பள்ளி..!!

இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் நான் கற்றுத் தருகிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். ஒரு மாணவர், ஒரு ஆசிரியரை வைத்துக்கொண்டு பள்ளியை தொடர்ந்து சிறப்பாக நடப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டுகின்றனர்.

Chella

Next Post

’என் தாயின் தங்க நகைகளையும், தந்தையின் வங்கி சேமிப்பையும் அழித்தேன்’..!! பிரபல நடிகர் உருக்கம்..!!

Mon Jan 23 , 2023
பெங்காலி திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான அனிந்தியா சட்டர்ஜி வெளியிட்ட தனது பேஸ்புக் பதிவில், இன்று எனது பிறந்தநாள். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுதலையாகி 15-வது ஆண்டு தினமாகும். எனது உண்மையான பிறந்த நாள் டிசம்பர் 29ஆம் தேதி. ஆனால், போதை பழக்கத்தில் இருந்து வெளியே வந்த நாளை, மிகவும் சந்தோஷமான நாளாக கருதுகிறேன். கடந்த 2008இல் பாங்க்ஷால் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதன்பின் […]
’என் தாயின் தங்க நகைகளையும், தந்தையின் வங்கி சேமிப்பையும் அழித்தேன்’..!! பிரபல நடிகர் உருக்கம்..!!

You May Like