fbpx

”யாரு சார் அந்த தெய்வம்”..!! வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் கொட்டிய பணம்..!!

ஒடிசா மாநிலத்தில் 549 கிளைகளுடன் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது ஒடிசா கிராமிய வங்கி. அங்குள்ள கேந்திரபாரா நகரில் இருக்கும் இந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளர்கள் பலரது கணக்குகளில் திடீரெனப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் யார் பணத்தை போட்டார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இருப்பினும், தங்களது கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள், வெள்ளிக்கிழமை காலை அந்த வங்கி திறந்ததும் பணத்தை எடுக்க விரைந்ததால் அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் மிரண்டுபோன வங்கிக் கிளையின் மேலாளர், 300 கணக்குகளைச் சோதித்துப் பார்த்ததாகக் கூறினார்.

“பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முயன்று வருகிறோம். வாடிக்கையாளர்களின் கணக்குகளில் யார், எதற்காகப் பணம் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகப் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்” என்று அவர் கூறினார். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.30,000இல் இருந்து ரூ.2 லட்சம் வரை போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Chella

Next Post

உங்கள் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா?… தவிர்க்க சில வழிமுறைகள்!

Sat Sep 9 , 2023
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதற்கான வழிகள் குறித்து பார்க்கலாம். பாலினம் மற்றும் மரபணு ஆகிய இரண்டுமே குழந்தை பருவத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான பழக்கம் உருவாவதற்கான காரணமாக அமைகிறது. 3 வயது மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பெண்களைக் காட்டிலும் ஒரு சில ஆண்கள் வளர்ந்த பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். இதில் குடும்ப வரலாறு ஒரு […]

You May Like