fbpx

BA.2.86 என்னும் புதிய வகை வைரஸ்….! 3 முறை தடுப்பூசி போட்டாலும் பாதிப்பு…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் ஆகியோருக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படும். ஆனால் அது போன்ற நபர்களுக்கும் தடுப்பூசி பாதுகாப்பு தரும்.

தற்பொழுது 3 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய பிறகும் கூட, சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகவும், தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவர்களுக்கு ஆண்டிபாடிகள் உருவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

புதிய வகை வைரஸ் ;

உலக அளவில் தற்போது இஸ்ரேல், டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க சுகாதாரத்துறையும் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. BA.2.86 என்ற இந்த புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பை கவனமாக ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய வைரஸை தவிர்த்து 10 கொரோனா வகைகளையும் அதன் தோற்றத்தையும் உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

மக்களே...! ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா...? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க...!

Sat Aug 19 , 2023
தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அநத திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் […]

You May Like