fbpx

‘என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க’..!! “செங்கோட்டையனிடமே கேளுங்க”..!! பிரஸ் மீட்டில் திடீரென கடுப்பான எடப்பாடி பழனிசாமி..!!

என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பதிலளித்த அவர், “எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என செங்கோட்டையனிடம் கேளுங்கள். என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். அதிமுகவில் நான் தலைவர் அல்ல; நான் சாதாரண தொண்டன். தனிப்பட்ட பிரச்சனைகளை இங்கு பேச வேண்டாம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். அங்குள்ளதுபோல் அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. திமுகவினரை போல் அதிமுகவினர் அடிமை அல்ல. அதிமுகவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். பட்ஜெட்டை பார்க்க அரசு ஏற்பாடு செய்த எல்.இ.டி. திரையில் சீமான் தான் தெரிந்தார்” என பேசினார்.

Read More : ’அவியல் கூட்டுப் போல் வேளாண் பட்ஜெட்’..!! ‘விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மையில் கூட ஊழல் செய்யும் திமுக’..!! எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு..!!

English Summary

Edappadi Palaniswami has said, “Ask Sengottai himself why he is avoiding meeting me.”

Chella

Next Post

பேரவையில் அதிமுக MLA-க்கள் அறைக்கு செல்லாத செங்கோட்டையன்.. சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்ததால் பரபரப்பு..!!

Sat Mar 15 , 2025
Sengottaiyan did not go to the AIADMK MLAs' room in the assembly.. Why did he meet Speaker Appavu alone..?

You May Like