fbpx

‘ஏன் டா படுபாவி’..!! ‘ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா’..? கொந்தளித்த நடிகை ராதிகா..!! என்ன காரணம்..?

திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடைப்பேச்சு வீடியோவை குறிப்பிட்டு, நடிகை ராதிகா சரத்குமார் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். மேடைப்பேச்சுகளில் அநாகரீகமாக பேசியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோரை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அதனை குறிப்பிட்டு தற்போது ராதிகா சரத்குமார் ஆவேசமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், “ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே. அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்” என முதல்வர், திமுக, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

Read More : பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! அதுவும் ’Work From Home’..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

EMI செலுத்த இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா..? வேலையே போனாலும் இனி அந்த டென்ஷன் கிடையாது..!!

Tue May 14 , 2024
EMI | தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிநீக்கம் கடந்த ஓராண்டாக அரங்கேறி வருகிறது. பெரிய நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைகளை பறித்து வருகின்றன. திடீரென வேலை இழந்தவர்களின் நிலை சொல்ல வேண்டியதில்லை. பலர் பணியில் இருக்கும் போது கார் லோன் அல்லது வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்குகிறார்கள். ஆனால், திடீரென அவர்களை வேலையை விட்டு நீக்கினால், பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாதச் சம்பளம் […]

You May Like