fbpx

கணவரை கொன்று பழைய அட்டைப் பெட்டிகளுடன் சேர்த்து கொளுத்திவிட்ட மனைவி..!! அதிர்ந்துபோன ஆந்திரா..!!

கணவனைக் கொன்று பழைய அட்டைப் பெட்டிகள், பழைய காகிதங்களை போட்டு வீட்டிலேயே எரித்திருக்கிறார் மனைவி. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் பட்டி கொண்டா பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணய்யா. இவரின் மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் அரசு மருத்துவராக உள்ளார். மற்றொரு மகன் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த முதியவரான தனது கணவரை கொலை செய்து வீட்டிலேயே பழைய அட்டைப்பெட்டி, பழைய காகிதங்களைப் போட்டு மனைவி லலிதா எரித்துள்ளார். முதியவரின் உடல் 80 சதவிகிதம் எரிந்து போய் இருந்திருக்கிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லலிதாவிடம் விசாரணை நடத்திய போது, உடல் நலக்குறைவினால் கணவர் காலமாகிவிட்டார். அக்கம்பக்கத்தினர் யாரும் உதவிக்கு வராததால் அவரது உடலை வீட்டிலேயே வைத்து எரித்தேன் என்று கூறியிருக்கிறார். லலிதா மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம். இதனால் அவர் உடல் நோய்வாய் பட்டு இருந்த கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து லலிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

கள்ளக்காதலை தொடர மறுத்த பெண்மணி…..! கள்ளக்காதலன் நள்ளிரவில் செய்த காரியம் விருதுநகர் அருகே பயங்கரம்…..!

Wed May 31 , 2023
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45) ,இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (41) இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தைச் சேர்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் முறை தவறி உறவாக மாறி, ராஜேஸ்வரியின் கணவர் வேலைக்கு சென்ற […]

You May Like