fbpx

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி..!! ஆத்திரத்தில் ரயில் பயணிகளை அலறவிட்ட கணவர்..!! நடந்தது என்ன..?

தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதால் கடுப்பில் இருந்த கணவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலை அடுத்து பதறி அடித்துக் கொண்டு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில்வே நிலையத்தை அதிரடியாக சோதனை செய்ய, கடைசியில் அந்த வாலிபரை பிடித்த போது தான் உண்மை தெரியவந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்திருக்கிறது. போலீசார் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பாட்னா ரயில்வே நிலையத்தில் அனைத்து நடைமேடைகளையும் சோதனை நடத்தினர். ரயில்வே போலீஸ் படை , அரசு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர தேர்தலில் வேட்டை ஈடுபட்டுள்ளனர். ரயில்வே நடைமேடைகள் மட்டுமல்லாது அங்கு இருக்கும் கழிவறை, சுமைகளை வைக்கும் அறை, குளியலறை, காத்திருப்பு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து இடங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

ஆனால், எங்கு தேடியும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டவில்லை . அப்போதுதான் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்த விசாரணையில், அந்த வாலிபர் ராஜேஷ்குமார் ரஞ்சன் என்பது தெரியவந்திருக்கிறது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தன் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இதனால் தனிமையில் இருந்த போது கடுப்பில் இதை செய்ததாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன போலீசார், அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

கணவரை கொன்று பழைய அட்டைப் பெட்டிகளுடன் சேர்த்து கொளுத்திவிட்ட மனைவி..!! அதிர்ந்துபோன ஆந்திரா..!!

Wed May 31 , 2023
கணவனைக் கொன்று பழைய அட்டைப் பெட்டிகள், பழைய காகிதங்களை போட்டு வீட்டிலேயே எரித்திருக்கிறார் மனைவி. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் பட்டி கொண்டா பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணய்யா. இவரின் மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் அரசு மருத்துவராக உள்ளார். மற்றொரு மகன் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த முதியவரான தனது கணவரை […]

You May Like