fbpx

இந்த தேதியில் பள்ளிகள் திறந்திருக்குமா..? குழம்பி தவிக்கும் மாணவர்கள்..!! நிலவரம் என்ன..?

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதால், கோடை விடுமுறையில் மாற்றம் வருமா என மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அடுத்த வாரத்துடன் தேர்வுகள் முடிவடைகிறது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. மேலும், 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

தேர்வுக்கு இடையே உள்ள நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் நாட்களுக்கு மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை எனவும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிப்பது எப்படி..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Chella

Next Post

Atlee Next Movie : அல்லுஅர்ஜூன் கூட்டணி…! அட்லீ போட்ட டீல்…! ஆடிப்போன சன் பிக்சர்ஸ்….!

Thu Apr 4 , 2024
அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் கூட்டணி வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அவர்களுடன் அட்லீ “டீல்” பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகத்தில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது இந்திய திரையுலகில் வளம் வரும் இயக்குனராகவும் உள்ளார். அட்லீ முதன் முதலில் ராஜாராணி எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எமோஷன், காமெடி, காதல் […]

You May Like