fbpx

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 9 நாட்களுக்கு விடுமுறையா..? மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி..!! வெளியாகும் அறிவிப்பு..?

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும். சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை பிற பண்டிகையை போல அல்லாமல் தொடர்ந்து விடுமுறை விடப்படும்.

இந்தாண்டு போகி பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி திங்கள் கிழமை வருகிறது. 14ஆம் தேதி (தை 1) பொங்கல், மறுநாள் திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல் (ஜனவரி 15), உழவர் திருநாள் (ஜனவரி 16) என 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாகும். ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பணி நாளாகும். எனவே, 17ஆம் தேதி அரசு விடுமுறை அளித்தால் சொந்த ஊர்களுக்கு கொண்டாட சென்றவர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்கும்.

அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை என்பதால் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும். இதனால், ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், “ஜனவரி 11 – 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை இருந்தால் பொங்கல் பண்டிகயை சிறப்பாக கொண்டாட முடியும். இது தொடர்பாக முறையான கோரிக்கையை ஜனவரி முதல் வாரத்தில் அரசிடம் வைக்கப்படும்” என்றனர்.

Read More : என்னை அடித்துக் கொண்டது பஞ்சு சாட்டையா..? அப்படினா உங்கள் மீது சோதித்து பார்க்க தயாரா..? சவால் விட்ட அண்ணாமலை..!!

English Summary

Pongal can be celebrated in a better way if there is a continuous holiday from the 11th to the 19th. A formal request in this regard will be made to the government in the first week of January.

Chella

Next Post

தூள்..! மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 தொகை... ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Tue Dec 31 , 2024
The Central Government will provide Rs. 2,000... Today is the last day to apply online.

You May Like