பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை 45 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை காலம் மற்றும் குளிர்கால விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். கோடைகால விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முடிந்த நிலையில், தற்போது அனைத்து கல்வி நிலையங்களிலும் 2ஆம் பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து குளிர் கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி முறை விடுமுறை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.