fbpx

“டேய், நீ பூனை குட்டி இல்லையா”; பூனை குட்டி என்று நினைத்து சிறுத்தையை வளர்த்த பெண்..

விக்டோரியா என்ற பெண், ரஷ்யாவில் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு முறை சைபீரியா காட்டுப் பகுதிக்கு சென்ற போது, அங்கு தனியாக கைவிடப்பட்ட பூனை குட்டி ஒன்றை பார்த்துள்ளார். அந்த குட்டியை காட்டுக்குள் தனியாக விட்டு செல்ல மனம் இல்லாத விக்டோரியா, அந்த குட்டியை தன்னோடு எடுத்து செல்ல நினைத்துள்ளார். அதன் படி, அவர் அந்த அழகிய கருப்பு நிற குட்டி பூனையை தன்னோடு வீட்டிற்க்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் குட்டி பூனையை தன்னோடு வீட்டிற்க்கு எடுத்து செல்லும் போது, விக்டோரியாக்கு அது பூனை குட்டி அல்ல, சைபீரியன் ஜூவில் பிறந்த லூனா என்ற பெயருடைய கருஞ்சிறுத்தை குட்டி என்று தெரியாது.

நாட்கள் செல்ல செல்ல, குட்டி பூனை என்று நினைத்த லூனாவின் உண்மையான சுயரூபம் தெரியவந்துள்ளது. லூனா மீது விக்டோரியா வைத்திருந்த அதிக பாசத்தால் லூனா பூனை இல்லை, கருஞ்சிறுத்தை என்று தெரிந்தும் அதைவிட்டு பிரியாமல் இருந்துள்ளார். மேலும், டிக் டாக்கில் @Luna_the_pantera என்ற பெயரில் கணக்கை தொடங்கி, கருஞ்சிறுத்தை குட்டியின் அன்றாட செயல்பாடுகளை பதிவிட்டு வந்துள்ளார். இதனால், லூனாவிர்க்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். சிறு வயதில் இருந்து, லூனா வீட்டிலேயே வளர்ந்ததால், மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் மிகவும் சாந்தமான விலங்காக தற்போது வரை உள்ளது.

Maha

Next Post

உலகக்கோப்பை இந்திய அணியில் மாற்றம்..! இணைகிறார் தமிழக வீரர்..!

Thu Sep 28 , 2023
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த 5ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றனர். ஆனால் இந்த உலக […]

You May Like