fbpx

உஷார்!!! ஆன்லைன் காதலினால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..

உத்திரபிரதேச மாநிலம், சரஸ்வதி மாவட்டத்தில் உள்ள, பர்தா ரோஷன்கர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் கரீம். சமயல் கலைஞரான இவர், தில்ரூபா ஷர்மி என்ற பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். வங்காளதேசத்தை சேர்ந்த தில்ரூபா ஷர்மியின் கணவர், கொரோனா காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த நிலையில், இவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். நாளடைவில், தில்ரூபா ஷர்மிக்கும், அப்துல் கரீமிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்துள்ளனர். பின்னர் நேரில் சந்தித்த இருவரும், லக்னோவில் ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர். இதையடுத்து, அப்துல் கரீம், தில்ரூபா ஷர்மியை அவரது கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது தான், அப்துல் கரீமிற்கு ஏற்கனவே கல்யாணமான சம்பவம் அப்பெண்ணிற்கு தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து, இவர்களின் கள்ளக்காதலை, அப்துல் கரீம் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தில்ரூபா ஷர்மி தனது சொந்த ஊரான வங்காள தேசத்திற்கு தனது 3 குழந்தைகளுடன் திரும்பி சென்றுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் ஆன்லைனில் பழகும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Maha

Next Post

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த 'அந்த' புகைப்படம்; சோகத்தில் முடிந்த நிச்சயதார்த்தம்..

Tue Oct 3 , 2023
தியாகதுருகம் அருகே உள்ள மாடூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஷ்வா. இவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வாலிபர் ஒருவருடன் அந்த இளம் பெண்ணிற்கு திருமணம் பேசி முடிவு […]

You May Like