தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் 62 வயதான பெருமாள். விவசாயம் செய்து வரும் இவருக்கு 55 வயதான தனம் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் மற்றும் மகளுக்கு திருமணமான நிலையில், பெருமாளும் தனமும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெருமாள், தினமும் தனது மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்று முன்தினம், பொருமாள் தனது மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பெருமாள், தனது லுங்கியால் அவரது மனைவியின் கழுத்தை நெரித்து, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பெருமாள் தாக்கியதில், தனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும், பெருமாள் தனது மனைவியை கொலை செய்த அதே கத்தியால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தனத்தின் உடலை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெருமாளை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.