fbpx

“என்ன விட்டுரு மா, வலி தாங்க முடியல” கதறிய மூதாட்டி; நெஞ்சை நொறுக்கும் வீடியோ..

மாமியார் மருமகளை கொடுமை செய்வதை பற்றி பலர் பேசுவது உண்டு. மாமியாரால் பல மருமகள்கள் வேதனையில் வாழ்வது உண்மை தான். ஆனால், மருமகளால் மாமியார் படும் வேதனையை பற்றி பலர் பேசுவது இல்லை. வயதான காலத்தில் எழுந்து நிற்க கூட தெம்பு இல்லாமல் மருமகளிடம் சித்ரவதை அனுபவிக்கும் மாமியார்கள் அநேகர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளால் மாமியார் படும் வேதனை கல்நெஞ்சங்களையும் கரைய செய்துள்ளது.

ஆம், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் லக்ஷ்மம்மா. இவருக்கு இரண்டு மருமகள்கள். இவரின் மூத்த மருமகள் பத்மா. இவருக்கும் மாமியாருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மூத்த மருமகள், தனது மாமியாரை துடப்பத்தால் கடுமையாக தாக்கி உள்ளார். இதனை எதிர் வீட்டில் வசித்து வரும் நபர் வீடியோ எடுத்து லக்ஷ்மியம்மாவின் இளைய மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

பேய்கள் குடியிருக்கும் பங்கர் கோட்டை!… இரவு நேரங்களில் நடக்கும் அமானுஷ்யங்கள்!… இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Sat Sep 23 , 2023
ராஜஸ்தானில் உள்ள பேய் கோட்டை என அழைக்கப்படும் பங்கர் கோட்டை பற்றியும் அதில் மறைந்துள்ள மர்மங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். ராஜஸ்தாஸ்தான் மாநிலம் ஆள்வர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலை தொடர் பகுதியில் உள்ள சரிஸ்கா என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இந்த பங்கர் என்ற கோட்டை உள்ளது. இந்த கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கேட்டையை பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னர் மாதோசிங் […]

You May Like