பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால் அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. இந்த உணர்ச்சியின் காரணமாக தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல ஒரு சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள். சரி வாருங்கள் பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றி பார்க்கலாம்.
எவ்வளவு மணி நேரம் காதலன் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு அது போதாது. மேலும் ஆணின் தோள் தனக்கானது என்று உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை அவளது கண்முன் அவனது தோளில் சாய்ந்தாள் அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பெண்கள் தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டே முடியை கோதிவிடுவதும் மிகவும் விரும்பி செய்வார்கள். அதே போலதான் பேசிக் கொண்டே காதலின் சட்டை பொத்தானை நோண்டாமல் பெண்களால் இருக்க முடியாது. சில நேரங்களில் மணிக் கணக்காக கூட நொண்டிக் கொண்டே இருப்பார்கள்.
காதலர்கள் தன்னை அவர்களது உலகமாக நினைக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் நினைப்பார்கள். காதலினிடம் எவ்வளவு மணிநேரம் பேசினாலும் பெண்களுக்கு போதாது. போன் வைத்த அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பார்கள். இல்லையென்றால் குறைந்தபட்சம் குறுஞ்செய்தி அனுப்பியாவது தூக்கத்தை நம் கெடுப்பார்கள். பெண்களுக்கு அவர்களது காதலர்கள் “ஐ லவ் யூ” சொல்லும் போது அவர்களின் காதில் தேன் பாயும் போல இருக்குமாம். ஆயிரம் முறை ஐ லவ் யூ கூறினாலும் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.