fbpx

உயிரை பணயம் வைக்கும் பெண்கள்..!! இப்படி ஒரு நிலைமையா..? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் ஆபத்தான முறையில் கிணற்றில் நீர் இறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நாசிக்கில் உள்ள பெயிண்ட் என்ற கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சரிந்துள்ளதால் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கிராமத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்கின்றனர்.

கிணற்றை சுற்றி நின்று உயிரை பணயம் வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Chella

Next Post

உங்கள் ஆதார் எண்ணை வைத்து வேறு யாரேனும் சிம்கார்டு வாங்கியுள்ளார்களா..? இனி நீங்களே கண்டுபிடிக்கலாம்..!!

Fri May 19 , 2023
வங்கிக் கணக்கு, கேஒய்சி, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் பெறுவது (அ) அரசு வசதிகளை பயன்படுத்திக் கொள்வது என எதுவாக இருந்தாலும் ஆதார் கார்டு தான் அவசியமாக இருக்கிறது. அதேபோல் நாம் ஒரு சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டை தான் அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் தொலைத் தொடர்புத்துறையின் விதிகளின் படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம்கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இந்த சிம் […]

You May Like