திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகுகலை குறித்து தில்லைநகரில் உள்ள நிறுவனத்திற்கு சென்று படித்து வருகிறார். இதற்காக அந்த பெண் தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், வழக்கம் போல அந்த பெண் பயிற்சியை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். பின்னர், அறையில் தங்கியிருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அந்த அறையில் தாழ்ப்பாள் போடாமல் தோழி வாலிபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், அறையின் கதவை திறந்த போது இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பித்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில்
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவர் அவரது காதலன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : தன்னுடைய ஆபாச வீடியோவை வைத்தே ஆபீஸரை மடக்கிய பெண்..!! சென்னை ஓட்டலில் பரபரப்பு சம்பவம்..!!