fbpx

உலகக்கோப்பையாக இருக்காது!… உலக பயங்கரவாத கோப்பையின் தொடக்கமாக இருக்கும்!… பயங்கரவாதி மிரட்டல்!

காசாவின் இன அழிப்புக்கு இந்தியாவும் காரணம் என்று விமர்சித்த காலிஸ்தானிய பயங்கரவாதி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நிறுத்தவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் ஒவ்வொரு போட்டியிலும் திரை பிரபலங்கள், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமில்லாமல் உற்சாகமாக கண்டு ரசித்தனர். அந்தவகையில், இன்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி, வெளிநாட்டு தூதர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் நரேந்திர மோடி மைதானத்துக்கு வருகை தர உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் மைதானத்தில் கண்கவர் நிகழ்ச்சிகள், விமானப்படையினரின் சாகசங்கள், லேசர் ஷோ உள்ளிட்ட பல நிகழ்வுகளும் ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது.இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்த இந்திய அணி முனைப்புடன் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் போட்டியை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியை நிறுத்த வேண்டுமென தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காசாவில் இன அழிப்புக்கு காரணமாக இந்தியாவும் இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார். நடைபெறப்போவது உலகக்கோப்பை போட்டியாக இருக்காது, உலக பயங்கரவாத கோப்பையின் தொடக்கமாக இருக்கும் என எச்சரிக்கை வித்துள்ளார்.

Kokila

Next Post

இது தெரியுமா…! ஏடிஎம் கார்டு மட்டும் போதும்.., தனியாக பணம் கட்டி, விபத்து & ஆயுள் காப்பீடுகள் எடுக்க வேண்டியதில்லை..!

Sun Nov 19 , 2023
இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மிக எளிதாகப் பொருட்கள் வாங்கலாம். ஏடிஎம் கார்டுகள் பல கூடுதல் நன்மைகளைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எனினும் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கிகள் காப்பீடுகள் வழங்கும் என்பது […]

You May Like